இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















