நீர்கொழும்பு – ஏத்துகல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது.
வேயங்கொடை, புடலோயா மற்றும் நமுனுகுல பிரதேசத்தில் வசிக்கும் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று, இளைஞர்கள் நால்வரும் ஏத்துகல கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
இதனை அவதானித்த ஏத்துகல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் நான்கு இளைஞர்களையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.