குருணாகல் மாநகர சபை ஏற்பாடு செய்த புரவர நடமாடும் சேவை, குருணாகல் மாநகர சபையில் வெள்ளிக்கிழமை (01) நாள் முழுவதும் நடைபெறும் என குருணாகல் மாநகர சபை உறுப்பினர் டாமியன் வீரகோன் தெரிவித்தார்.
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 11 துறைகள் தொடர்பான சேவைகளை இந்த நடமாடும் சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
குருணாகல் மாநகர சபையின் 13 பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த புரவர நடமாடும் சேவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















