ரிஷப் ஷெட்டி மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷனல் ருக்மிணி வசந்த் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1. 2022 ஆம் ஆண்டு மிகக் குறைவான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட படமாக மாறியது தான் காந்தாரா. 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன் காரணமாகவே இப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. என்னதான் முதல் பாகத்தில் இருக்கும் ஒரு சில விஷயங்கள் இந்த பாகத்தில் குறைவானதாகத் தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் காந்தாரா சாப்டர் 1 தரமான ஒரு படைப்பாகவே உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திரைப்படம் நேற்று வெளியாகி, முதல் நாளிலே 65 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.
மேலும் பல பெரிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளையும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முறியடித்துள்ளது.
மேலும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதால் மேலும் இப்படத்தின் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என்றே தெரிகின்றது.
பான் இந்திய அந்தஸ்தை பெற்று வெளியாகியிருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூலை குவிக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
கன்னட படமான காந்தாரா தமிழ் முதல் ஹிந்தி வரை அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகின்றது. குறிப்பாக ஹிந்தி மொழிகளில் மட்டும் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.
காந்தாரா சாப்டர் 1 ஹிந்தி மொழிகளில் சக்கைபோடு போடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இரண்டே நாட்களில் இப்படம் நூறு கோடி வசூலை அசால்டாக கடக்கும் என உறுதியாக தெரிகின்றது.















