• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, July 7, 2025
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ஆன்மிக தகவல்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ஆன்மிக தகவல்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் : மகஜரும் கையளிப்பு

MISadmin by MISadmin
June 25, 2025
in இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள், சிறப்புச் செய்திகள், செய்திகள்
0
திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் : மகஜரும் கையளிப்பு
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள்  மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை கிழக்கு  மாகாணத்தில்  பாதிக்கப்பட்ட மக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கம், சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர். 

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் வழங்கி அவருடன் உரையாடியிருந்தார்கள்.

இதன்பின்னர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தாங்கியிருந்த பதாதைகளை அவர்களிடத்தில் சென்று ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன் தனது அன்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பாதிக்கப்பட்ட மக்களினால் வழங்கி வைக்கப்பட்ட மகஜரில் பின்வரும் விடயங்களை குறிப்பிடப்பட்டு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் இயல்பு நிலையை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதோடு, உங்கள் அன்பான பரிசீலனைக்கு முக்கிய விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம் என குறிப்பிட்டு;

1. 1833 இல் பிரித்தானியரால் தமிழரின் தாயகம் (வடக்கு கிழக்கு) மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்ட போது, தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமை, தேசியத்தன்மை மற்றும் தாயக உரிமையை இழந்தனர். முதலாவது இலங்கை அரசு தொடங்கி இன்றுவரை ஆட்சிக்கு வந்துள்ள அனைத்து அரசுகளும் இந்த உரிமைகளை ஒடுக்கியுள்ளன. 1983 இல் “கருப்பு யூலை” கலவரங்களை பரிசீலித்த International Commission of Jurists (ICJ)> “இவை தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்புச் செயல்கள்” என அறிவித்தது. இத்தகைய தமிழர் அழிப்புத் திட்டங்கள் 2009 மே மாதத்தில் உச்சத்தை எட்டின.

2. 2009இற்குப் பிற்பகுதியில் இருந்து இன்று வரை, தமிழர்களிற்கெதிரான தொடரும் இன அழிப்பு (Constructive Genocide) எமது இருப்பை அழிக்கும் நிகழ்ச்சிநிரலில் இயங்குகிறது. அரசின் அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகள் தேசிய கொள்கைகளைத் திரித்துக் கொண்டு அவை தமிழர்களுக்கு எதிரானவையாகச் செயற்படுகின்றன. இது பன்னாட்டு சமூகத்தால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

3. தமிழர்கள் மீது இடம்பெற்ற பன்னாட்டுக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் இந்நாட்டில் தொடங்கப்படவில்லையே தவிர, னைத் தாமதப்படுத்த உச்ச அளவிலான இராசதந்திரத்தை அரசு பயன்படுத்துகிறது. அதேவேளை, மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொடுமைப்படுததுதலையும், விசாரணைகளை மேற்கொள்வதையும் தொடர்வதுடன் அவர்களை எப்போதும் கண்காணிக்கப்படுபவர்களாக வைத்திருக்க அரசு முயல்கிறது.

4. OSLAP (OHCHR on Sri Lanka Accountability Project)  உறுப்பினர்களுக்கே இலங்கைக்கு வருவதற்கு விசா மறுக்கப்படுகின்றது. இது நீதிக்கான அரசின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் துல்லியமான சான்றாக இருக்கின்றது.

5. தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான நிலங்களில், அரச ஆதரவுடன் காலனித்துவக் குடியேற்றம் (settler colonisation) தொடர்கின்றது. மிகச்சமீபத்திய உதாரணமாக மட்டக்களப்பின் மயிலாத்தமடு பகுதியில், தமிழர்கள் பண்டைய காலம் முதல் பயன்படுத்திவரும் மேய்ச்சல் நிலம், சிங்கள குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். நீதிமன்றம் அவர்களை அகற்ற உத்தரவு வழங்கினும், காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது. மாறாக, குடியேற்றக்காரர்கள் கட்டிடங்கள் அமைக்க, அரசாங்கம் கட்டுமான வசதிகளை வழங்குகின்றது. எனவும் மேலுள்ள அம்சங்களின் மூலம், ஐயா, நீங்கள் தரவுகளில் காணப்படும் விடயங்களுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உணரலாம்.

எனவே, நாங்கள் பணிவுடன், உங்கள் கனிவான கவனத்திற்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:

1. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.

2. செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும்  பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுமதிக்கவேண்டும்.

3. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு குற்றங்களுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐஊஊ) பரிந்துரை செய்யவேண்டும்.

4. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில் இடம்பெறும் நில பறிப்புகளை உடன் நிறுத்தி, உரிமையாளர்களுக்கு நிலங்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

6. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடி, அவர்கள் இன்னும் உயிருடன் உள்ளார்களா? என்ன நிகழ்ந்தது? என்பதற்கான பதில்களை உடன் வழங்க வேண்டும்.

7. 1948 முதல் தொடரும் வன்முறை மற்றும் தமிழர் இன அழிப்பின் முழுமையான அடித்தள அறிக்கையை OSLAP வெளியிட வேண்டுமென வலியுறுத்தவேண்டும்.

8. பயங்கர வாத தடை  சட்டம் மற்றும்  நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act)  இரத்து செய்ய இலங்கை அரசை அழுத்த வேண்டுகிறோம்.

9.செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், SL அரசும் பன்னாட்டு அமைப்புகளும் இணைந்து செயல்படும் ஒரு கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க பரிந்துரை செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளையும் கிழக்க மாகாண பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் அமைப்புக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், மனித உரிமை செயற் பாட்டாளர்கள் இணைந்து வழங்கியிருந்தார்கள்.

Previous Post

எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு அவசியம்!

Next Post

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Related Posts

அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம்

July 4, 2025
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை
உலக செய்திகள்

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

July 4, 2025
‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்”
உலக செய்திகள்

‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்”

July 4, 2025
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!
இலங்கை செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

July 4, 2025
கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து ; இளைஞன் காயம்!
இலங்கை செய்திகள்

கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து ; இளைஞன் காயம்!

July 4, 2025
Next Post
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் : மகஜரும் கையளிப்பு

திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளை கேட்டறிந்தார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் : மகஜரும் கையளிப்பு

June 25, 2025
விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

June 23, 2025

சண்முகநாதன் நாகரத்தினம்

July 4, 2025
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

June 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம்

அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம்

July 4, 2025
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

July 4, 2025
‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்”

‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்”

July 4, 2025
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

July 4, 2025

Recent News

அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம்

அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம்

July 4, 2025
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

July 4, 2025
‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்”

‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்”

July 4, 2025
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது!

July 4, 2025

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home

Recent Posts

  • அமெரிக்காவில் இரவு நேர களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 14 பேர் காயம் July 4, 2025
  • காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை July 4, 2025
  • ‘காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்” July 4, 2025
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ஆன்மிக தகவல்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.