யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்துவிசேட அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸார் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆலயத்திற்கு பொதிகளுடன் வருபவர்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கை முன்னெக்கப்பட்டது.
இதே வேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஒரு விசமியினால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

















