ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.
இந்த நிலையில் சமிபத்தில் ஜீ.வி – சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
அதாவது, விவாகரத்துக்குப் பிறகும் ஜீ.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒன்றாக பணியாற்றுவது ஆச்சர்யமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில்,
‘நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்’ என ஜீ.வி பதில் அளித்து இருக்கிறார்.

மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்த போது, ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினார்கள். அப்போதும் இருவரும் மனதார பிரிவதாக கூறியுள்ளனர்.
அடுத்து, வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட பொழுது இருவருக்கும் விவாகரத்து உறுதியாகியுள்ளது.















