உடல் உறுப்புக்களைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு. உள் உறுப்புக்கள் ஒழுங்காக செயல்பட்டால் மட்டுமே நமது வெளிதோற்றம் நன்றாக இருக்கும். அந்த வகையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் உள் உறுப்புக்களில் நுரையீரலும் ஒன்றாகும். நுரையீரல் சுவாச சம்பந்தப்பட்ட விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பருவ கால மாற்றத்தின் போது காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், மாசுபட்ட காற்றை சுவாசிப்பது ஆஸ்துமா, நிமோனியா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மீண்டும் வருவது போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த பருவத்தில் நுரையீரலை தூசி துகள்களிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியம். இதற்கு வீட்டிலேயே ஒரு மூலிகைத் தேநீர் செய்து குடிக்கலாம்.
நுரையீரல்

நுரையீரல் என்பது சுவாச மண்டலத்தின் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சேர்ப்பதற்கும், கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதற்கும் உதவுகிறது.
வாயுப் பரிமாற்றம் இதன் முக்கிய பணியாகும்.
நுரையீரல் சரியாக வேலை செய்யாத போது சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா போன்ற பல நோய்கள் ஏற்படலாம். மேலும் இருமல், சளி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.
மூலிகைத் தேநீர்

இந்த மூலிகைத் தேநீர் வீட்டில் ஒள்ள பொருட்களை வைத்தே தயாரிக்கலாம். இதில் ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.
இந்த தேநீர் தயாரிக்க இலவங்கப்பட்டை, ஆர்கனோ, கருப்பு மிளகு, பச்சை ஏலக்காய், துளசி இலைகள், பெருஞ்சீரக விதைகள், இஞ்சி மற்றும் செலரி தேவைப்படும்.
இந்த மூலிகைத் தேநீர் தயாரிக்க அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், தேநீரை ஒரு கோப்பையில் வடிகட்டி குடிக்கவும்.
நன்மைகள்
குளிர் காலம் தொடங்கியவுடன் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் தொடங்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வலுவான நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்ற சூழ்நிலையில், இந்த மூலிகைத் தேநீர் எல்லா வகையிலும் பயனளிக்கும். இந்த மூலிகைத்
தேநீரைத் தொடர்ந்து உட்கொள்வது நுரையீரலை சுத்தம் செய்ய உதவும்.
இந்த மூலிகைத் தேநீரில் மிகவும் கடுமையான நோய்களிலிருந்து கூட உங்களைப் பாதுகாக்கக்கூடிய பல வகையான மருந்துகள் மற்றும் மூலிகைகள் உள்ளன.


















