பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிரான்சுவா பெய்ரு தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது.
9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிரான்சுவா பெய்ரு அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பிரான்ஸ் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 364 எம்.பி.க்கள் பிரதமர் பிரான்சுவா பெய்ருக்கு எதிராகவும், 194 எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இந்த நிலையில் பிரதமர் பதவியை பிரான்சுவா பெய்ரு ராஜினாமா செய்தார்.
முன்னதாக அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கூட தனக்கு எதிராக கூட்டணி சேர்ந்து கொண்டு செயல்படுவதாக பிரதமர் பிரான்சுவா பெய்ரு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த தனது முன்னோடி மைக்கேல் பார்னியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பேய்ரூ இப்போது பதவி விலகியுள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரும் நாட்களில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது. ஆனால் பெய்ரூவின் விலகல் மக்ரோனுக்கு சில சுவையான விருப்பங்களை மட்டுமே விட்டுச்செல்கிறது


















