மீகொடை, முத்துஹேனவத்த, நடுன் உயன பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நேற்று புதன்கிழமை (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
ஒன்பது மில்லிமீட்டர் தோட்டாக்களைப் பயன்படுத்திய பிஸ்டல் வகை துப்பாக்கியிலிருந்து ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் தோட்டா மற்றும் தோட்டா உறை வீட்டின் முன் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், துப்பாக்கிதாரர்கள் மோட்டார் சைக்கிளில் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றதுடன், மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















