நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 03 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 959 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1108 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 1026 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 22 பேரும், கஞ்சா செடிகளுடன் 27 பேரும், போதை மாத்திரைகளுடன் 68 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 368 கிராம் 456 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கிலோ 656 கிராம் 363 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 326 கிலோ 398 கிராம் 592 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 353 கிராம் 79 மில்லி கிராம் ஹேஷ் போதைப்பொருளும், 2999 போதை மாத்திரைகளும், 371 சட்டவிரோத சிகரட்டுகளும், 41907 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.