இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ஓட்டங்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8, வாஷிங்டன் சுந்தர் 13 ஓட்டத்தில்வெளியெறினர்.
அடுத்ததாக கப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார். தொடர்ந்து ஆடிய கோலி 135 ஓட்டங்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 60, ஜடேஜா 32 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
இதையடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் ப்ரீட்ஸ்கி ஜோடி நிலைத்து நின்று விளையாடி 66 ஓட்டங்;கள் எடுத்தது. தொடர்ந்து மெத்தியூ ப்ரீட்ஸ்கி நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். மார்கோ யான்செனும் அரைசதம் கடந்தார். ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் 49.2 ஓவர்களில் ஹர்ஷித் ரானா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க தென் ஆபிரிக்க அணி 332 ஓட்டங்;கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
















