கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கஞ்சா செடிகள் தனமல்வில பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டவை என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


















