சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (வயது 55) என அடையாளம் காணப்பட்டவர், சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்து மூன்று மாதங்களாக வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார். முந்தைய நாள் அவர் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பி வந்தார்.
அவர் கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


















