2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதையுடன் வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 5,075 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

















