இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிரடியாக அதிகரித்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 393,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 361,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி தீவிரமாக அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என நகையக வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.


















