இந்தியாவின் உத்தர பிரதேச மநிலத்தில் தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கொல்ல வருவதாக கணவர் அளித்துள்ள விநோத புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், அண்மையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர் ‘ஐயா என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்’ என்று கூறி முறைப்பாடு அளித்தார்.
தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது எந்த இரவில் வேண்டுமானாலும் என்னைக் கொல்லக்கூடும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அந்த முறைப்பாடு குறித்த விசாரணைக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
துணைப்பிரிவு நீதிபதி மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
















