-ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்-
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
கட்சியினால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாலும், நிலக்கரி கொள்முதல் செயல்முறையை அவர் முறையாக நிர்வகிக்கத் தவறியதாலும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இதற்காக மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


















