மூவாயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.
குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை உடனடியாக விநியோக பிரிவுக்கு கையளிக்கவுள்ளதாக, லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன ஜயவர்தன எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று முதல் தொடர்ச்சியாக எரிவாயு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் இன்மையே, எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


















