ஓய்வுநிலை ஆசிரியர்கள், அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உச்சபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, இந்தப் பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் உட்சபட்ச நடவடிக்கைகளை எடுத்து, நீதியை நிலைநாட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பினரால் கடந்த வெள்ளிக்கிழமை பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். பி.சி. பெரேரா சம்பள ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்காமையால் சுமார் 85,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலருக்கு 40,000 ரூபா ஓய்வூதியம் பெறும் வேளை, மற்றும் சிலர் சுமார் 120,000 ரூபா ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் எடுக்க முடியுமான உட்சபட்ச நடவடிக்கைகளை எடுத்து, நீதியை நிலைநாட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் தலைமை தாங்குவோம். இது தொடர்பான முன்மொழிவுகளை இம்முறை வரவுசெலவுத் திட்ட விவாதத்திலும், குழு நிலை விவாதத்தின் போதும் முன்வைப்பேன்.
தேவையேட்படின் இலவச சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.















