கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடமிருந்து 2 கிலோ 300 கிராம் நிறையுடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















