தற்போதைய அனர்த நிலைமை வரவிருக்கும் பண்டிகைக் காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கொடுப்பனவு ஒருமுறை மாத்திரமே வழங்கப்படவுள்ளதாகவும், 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய்சேய் நல நிலையங்களில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கிடைக்கப் பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் (National Secretariat for Early Childhood Development) திட்டமாக டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலலகங்கள் (Divisional Secretariat offices) ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கர்ப்பிணித் தாய்கள் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெற்று, சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















