குளவிக் கூடுகளால் சிவனொளி பாதமலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் குளவிக் கூடுகளை அகற்றுமாறு யாத்திரிகர்கள் மற்றும் மக்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குளவி கூடுகளை பருந்துகள் மற்றும் கழுகுகள் தொடர்ந்து தாக்குகின்றன. மேலும் அவை பலத்த காற்றில் சரிந்தால், குளவிகள் கிளறி, வெளிநாட்டினர் உட்பட சிவனொளி பாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களைத் தாக்குகின்றன.
காயமடைந்தவர்களை நல்லதன்னி நகரத்திற்கு கொண்டு வர பல மணிநேரம் ஆகும் என்றும், மஸ்கெலியா நகரத்தில் உள்ள பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் இறந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒவ்வொரு சிவனடி பாத மலை பருவகாலத்திலும், குளவித் தாக்குதல்களால் பக்தர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்கின்றனர். நல்லதன்னி-சிவனொளி பாத மலைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அதிக எண்ணிக்கையிலான குளவி கூடுகள் அமைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குத் துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொறுப்பான நபர்கள், அறிவியல் முறையைப் பயன்படுத்தி அந்தக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாத்ரீகர்களும் உள்ளூர்வாசிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.


















