ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.
பொகவந்தலாவை – மோரா பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பயிற்சி நிலையத்தில் செயன்முறைப் பட்டறைக்காக வந்த மாணவர்கள் குழுவே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர் குழுவில் உள்ள 6 மாணவர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















