இன்று ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பத்திலோ அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டாலோ, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்பு கொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 117 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக மேலும் 4 புதிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


















