அனைத்து தரப்பினரும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டிலுள்ள தெரிவித்தார்.
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணக்கார கிராமத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ ஏரியின் பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது அரசாங்கத்தால் மட்டும் செய்யக்கூடிய பணி அல்ல.
நாட்டின் அறிவுஜீவிகள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் வலுவான மற்றும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியும்.
எளிமையான வாழ்க்கை வாழும் கிராம மக்களுக்கும் சுதந்திரம் தேவை. சுதந்திரத்தை அனுபவிப்பது சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது.
‘மக்களுக்கு ஒரு உன்னதமான கலாச்சார வாழ்க்கையை வழங்க உறுதிபூண்டுள்ள ஒரு அரசாங்கம் என்ற வகையில், மக்கள் சுதந்திரமான மனதுடன் மகிழ்வதற்கும், நடப்பதற்கும், நேரத்தை செலவிடுவதற்கும் இதுபோன்ற இடங்களை மேலும் கட்டுவது மிகவும் முக்கியம் என்றார்.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


















