கடல்சார் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த, சைபர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது அவசியம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் நிபுணர்கள், இலங்கையின் கடல்சார் துறை நிபுணர்களுடன் இணைந்து, கொழும்பில் சைபர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்டனர்.
கடல்சார் துறையில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். துறைசார் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து, கடல்சார் தகவல் அமைப்புகள், துறைமுக முகாமைத்துவம் மற்றும் கடற்பாதுகாப்பு அமைப்புகளில் உருவாகக்கூடிய சைபர் அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றிய நடைமுறை விளக்கங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்த பயிற்சி நிகழ்வு, பிரிட்டன் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் Foreign. Commonwealth & Development Office இந்தியப் பெருங்கடல் சார் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த திட்டம், General Sir John Kotelawala Defence University உடன் கூட்டாண்மையில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















