இலங்கையில் இயங்கி வரும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வர்த்தக மற்றும் முதலீட்டு சவால்கள் குறித்து இருதரப்பினரும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற இடராட்சி பொருளாதார கொள்கை கலந்துரையாடலை குறிப்பிட்ட ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார பிரிவு தலைவர் ஓஹாஷி கெஞ்சி, இலங்கையில் ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்கும் வழிமுறைகள் மற்றும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்கால ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வர்த்தக சூழலை உருவாக்குவதில் இந்தக் குழுவின் பங்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் இயங்கும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இலங்கை முதலீட்டு சபை மற்றும் அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கி வரும் நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஓஹாஷி கெஞ்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
ஜப்பான் – இலங்கை பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் இத்தகைய கலந்துரையாடல்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















