நாடு முழுவதும் நாளை முதல் மழையுடன் கூடிய வானிலையின் தாக்கம் ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
















