பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் 5 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பதுளை-மஹியங்கனை வீதியின் தல்தேன, புசல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.















