கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
கலைப்பீடத்தின் பொதுப் பட்டப்படிப்புக்கான (General Degree) கல்வி அலகுகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாணக் கோரியும், பயிற்சிக் கால (Internship) மாணவர்கள் அநீதியான முறையில் சுரண்டப்படுவதைத் தடுத்து முறையான கொள்கையொன்றை வகுக்கக் கோரியும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தின் செனட் மந்திரத்தை (Senate Building) வந்தடைந்த இந்தப் பேரணி, அங்கு கட்டடத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டமாக தொடர்ந்தது.


















