வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஊவா, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் கடும் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 360 கி.மீ வடக்கே நிலை கொண்டுள்ளது. இது மெதுவாகத் தென்மேற்கு திசையில் வளைந்து, மேலும் வலுவிழந்து மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
எனவே, தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















