கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பாடசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


















