-எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா-
இயற்கை பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இயற்கை பேரழிவில், அரசியல் செய்வதற்கு சில எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இவ்வாறான அற்ப சிந்தனைகளில் எவரும் செயற்படக்கூடாது. நாடு அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமலாகியுள்ளனர். மேலும், பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான நடவடிக்கையை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டில் இடம்பெற்றது இயற்கைப் பேரனர்த்தம். இதற்கு அரசு மீது குற்றம் சுமத்த முடியாது. இந்தப் பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழ உதவுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கைப் பேரனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை அமைப்பு, 250 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
















