சூறாவளி, டித்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பின் மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க கூறினார். உலகளாவிய ஆராய்ச்சியில், இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திடீர் இழப்பு, அதிர்ச்சி மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை கடுமையான உளவியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன, இது மாரடைப்பைத் தூண்டும்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு மற்றும் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள், இது அவர்களின் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
பொதுமக்களை மன வலிமையைப் பராமரிக்கவும், போதுமான தூக்கத்தைப் பெறவும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டுமென டாக்டர் ரணசிங்க வலியுறுத்தினார். மார்பு அசௌகரியம் அல்லது இதயம் தொடர்பான அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அவர் அறிவுறுத்தினார்.


















