பேரிடரினால் இலங்கையில் சுமார் 6164 வீடுகள் முற்றாக தேசமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று காலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
அதன்படி 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. 23041 குடும்பங்களைச் சேர்ந்த 72911 பேர் 796 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டித்வா புயல் தாக்கம் காரணமாக 391401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
















