பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளைப் போன்ற சீருடைகளை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
பாணந்துறை மற்றும் பண்டாரகமவைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அனுமதியின்றி இலங்கை பொலிஸூக்கு சொந்தமான சீருடைகள் மற்றும் சீருடைகளின் பகுதிகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது, இந்த சந்தேக நபர்கள் குறிப்பிட்ட பொலிஸ் சீருடைகளை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.


















