-நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு-
நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
2013 ஆம் ஆண்டு நுவரெலியா கந்தப்பளை பகுதியில் தனது மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய முன்னிலையில் தீர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், சந்தேக நபர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
















