முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு மற்றும் அது தொடர்பான ஆலோசனை பத்திர அறிக்கைகளை www.pucsl.gov.lk என்ற இணைத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மொழிக் கருத்துக்களை தெரிவிக்கும் அமர்வு செப்டெம்பர் 18 முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை 9 மாகாணங்களிலும் நடைபெறும் என அறிவித்துள்ளது.


















