மட்டக்களப்பு – கரடியனாறு, ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தவர் ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரத்தினம் என்பவராவார்.
செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வயலில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளை இவரை யானை தாக்கியுள்ளது.
இதில் இவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வழியில் உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















