ரி-20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதியது.
கண்டியில்நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ஓட்டம்; குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் மட்டும் 62 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ஓட்டங்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
பதும் நிஸங்க (9), கமில் மிஷார (6), குசல் மென்டிஸ் (4), பவன் ரத்னாயக்கா (0) என அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் பறிபோனது.
கப்படன் சானக்கா (30), கமிந்து மென்டிஸ் (13), வெல்லாகே (10), தீக்சன (10) என விக்கெட்டுக்கள் சரிந்ததால் இலங்கை அணியால் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்கப் பிடிக்கமுடியவில்லை.
இலங்கை அணி இறுதியில் 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை எடுத்து பரிதாபமாக தோல்வியை தழுவியது. இதன்மூலம் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
பெரும் எதிர்பார்ப்போடு மைதானத்தில் குவிந்த இலங்கை அணி ரசிகர்களுக்கு இலங்கை அணி ஏமாற்றத்தை கொடுக்கும் நாளாக நேற்றையதினம் அமைந்துவிட்டது. அரையிறுதிற்குள் இலங்கை நுழைவதற்கு இனிவரும் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து இரு போட்டியிலும் வெற்றி பெறவெண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.


















