தர்மபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
அதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் கைக்குண்டை அவதானித்தனர்.
அதன்பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் இருந்து கைக்குண்டினை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.


















