-23,344 ஆசிரியர்களுக்கு வாய்ப்பு-
அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, உச்சபட்சமாக 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு (705), நீதி அமைச்சு (452), கல்வி அமைச்சு (442), கைத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு (10), பொதுநிர்வாகம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு (37), நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (76), பாதுகாப்பு அமைச்சு (102), பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு (19), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு (10), வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு (01), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு (166), கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு (167), வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு (33), கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு (50), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு (23), ஜீவனகோள்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு (248), மத்திய மாகாண சபை (203), வட மத்திய மாகாண சபை (06), தேசிய பொலிஸ் ஆணையம் (01) உள்ளிட்ட அமைச்சுகளுக்கே புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


















