சீனா அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தது.
சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரணப் பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 84,525 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீனா அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சீனா அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















