குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில் இடம்பெற்றது. சேகரிக்கப்பட்ட நீரை மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் யாழ்ப்பாணத்தில் இன்று கையளிப்பார்.
இந்தப் போரட்டத்துக்கான எமது ஒத்துழைப்பாக சேர்க்கப்பட்ட இந்த நீரை யாழ் கிட்டுப்பூங்காவில் இடம்பெறும் நிகழ்வில் நான் கையளிப்பேன். நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலையாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்


















