மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் காரணமாக அங்குள்ள சுமார் 10 லட்சம் இலங்கையர்களின் நலன்களை பேணுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக உத்தியோகபூர்வ விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன: மத்திய கிழக்கில் வாழும் மற் றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த அவசர உதவி பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட, தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8: 00 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்கள்: 1094 117 445641 – 1094 112 207250, வட்ஸ்அப் எண்: 1094 077 7189552 (செய்திகள் மட்டும்)
மின்னஞ்சல் : emergency.sl@mfa.gov.lk தூதரக விவகாரப் பிரிவு: 1094 742 595546 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்: 1094 719 802822உலகம் செய்திகள் அவசர அழைப்பு எண் (Hot line): 1989
இலங்கையர்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளும் தற்போதைய சூழ்நி லையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிரப் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமையை வழங்குகிறது.


















