ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி நேரடியாக பாதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலபும் பதற்றம், காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது .இலங்கை தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதில்லை.
ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக, இலங்கை தற்போது ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்லும் கடல் வழித்தடங்களையே பயன்படுத்தி வருகிறது. இந்த நீரிணை மூடப்படுவது உலகளாவிய எரிபொருள் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இலங்கைக்கு அது ஒரு பிரதான தடையாக அமையாது என்றார்.


















