அம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது
உயிரிழந்தவர் தரம் இரண்டில் கல்வி கற்கும் 07 வயது சிறுமி ஆவார்.
இதேவேளை, யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தை அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று பாடசாலை விடுமுறை என்பதால் சிறுமி தனது தந்தைக்கு விவசாய நடவடிக்கைகளில் உதவி செய்து கொண்டிருந்த வேளை காட்டு யானை இருவரையும் தாக்கியுள்ளது


















