-பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்-
மக்கள் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கியூஆர் முறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்தார்.
கரவெட்டி ராஜ கிராமத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தற்போது மத்திய கிழக்கில் இடம்பெறும் யுத்தத்தால் இங்கே எரிபொருளுக்கு வரிசையில் நிக்கின்ற தேவை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில், எங்களுடைய மக்கள் சித்திரை புத்தாண்டை நல்ல முறையிலே கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கியூ.ஆர் முறையினை கொண்டு வந்திருக்கிறோம்.
இந்த கியூஆர் முறைமூலம் இந்த எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க கூடியதாகவிருக்கும். எனினும், யுத்தம் நீடித்தால் நிலைமைகள் சிக்கலாம். எனவே மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி சூழலை சமாளிக்க வேண்டும் என்றார்.


















