ஓமன் கடலோரத்திற்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலாவ் கொடி ஏந்திய செட்டெபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா மற்றும் தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் அடங்குவதாக இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், பிராந்தியத்தில் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
















